Thursday, May 7, 2009

பெரியாரின் பேரன் யாராய் இருந்தால் என்ன?

இது என்னட புது கதையாக உள்ளது என்று உங்களுக்கு தோன்றலாம்.ஆனால் இந்த பேரன் விவகாரம் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
 
பெரியாருடைய உண்மையான பேரன் நான் தான் என்று ஈவிகேஎஸ் இலங்கோவன் உரிமை கொண்டாடும் அளவுக்கு இப்போ என்ன நடந்தது?
 
அவரை பெரியாரின் பேரன் இல்லை என்று யார் சொன்னது.அவருக்கு ஏன் இப்படி ரோசம் பொத்துக்கொண்டு வரவேண்டும்.
 
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கு பொதுவானவரே தந்தை பெரியார்.அவரை தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாடி அவருடைய பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வேலையில் இறங்கிவிட்டார் இந்த காங்கிரஸ்காரர்.
 
காங்கிரஸ் கட்சியின் சமீபக்கால நகர்வுகள் தமிழ் நாட்டில் ஒரு விதமான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் போது இதுதன்னை திராவிட பிண்ணனியில் இருந்து வந்தவன் என்று காட்டி ஓட்டு பொறுக்கும் வேலையை கச்சிதமாக செய்ய முயற்சி செய்கிறாரோ என்று சந்தேகப்பட வைக்கிறது.
 
அப்படி ஏமாற தமிழக மக்கள் என்ன காதில் மல்லிகை பூவா வைத்துள்ளார்கள்??
 
 

No comments:

Post a Comment