Thursday, May 7, 2009
பெரியாரின் பேரன் யாராய் இருந்தால் என்ன?
ஆபாசமாக படு கேவலமாக பேசிய அருமை பேரன்
Sunday, May 3, 2009
கடைசி செய்தி:மீதம் உள்ள நிலப்பரப்பில் முச்சு திணரும் குண்டுகளை வீச இலங்கை ராணுவம் தாயாராக்கிக் கொண்டிருக்கிறது.
கடைசி செய்தி:மீதம் உள்ள நிலப்பரப்பில் முச்சு திணரும் குண்டுகளை வீச இலங்கை ராணுவம் தாயாராக்கிக் கொண்டிருக்கிறது.
உலகினால் தடைசெய்யப்பட்ட இவ்வகையான குண்டுகளை வீச 200 சிறப்பு வகையான முகமூடிகள்,மற்றும் உடைகள் கிளிநொச்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தெரிவிக்கப்படுகிறது.
இந்த குண்டுகள் 30 நிமிடங்களுக்குள் முச்சு திணறல் ஏற்படுத்த வல்லது.மேலும் குழந்தைகள்,முதியோர் அனைவரையும் கொன்றுவிட கூடியது இவ்வகையான குண்டுகள்.
உறவுகளே பாரிய அழுத்தம் கொடுத்து இவ்வபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்ற உதவுங்கள்
செய்தி மூலம்:அதிர்வு
Saturday, May 2, 2009
ராணுவ வாகனங்களில் இருந்த ராக்கெட் லாஞ்சர்கள் உண்மையானவைகள் அல்ல-தினமலர்
இன்றைக்கு தினமலர் இணையம் திறந்து அதன் திருவாய் மலர்ந்து அருளும் செய்திகளை பார்வையிட்ட போது எப்பொழுதும் உண்மையை மட்டுமே பேசும்!! தினமலர் இந்த ராணுவ வாகனங்களின் ஆயுதங்களை பற்றி என்ன சொல்லியுளது தெரியுமா?
அந்த ராணுவ வாகனங்களில் இருந்தது டம்மி ராக்கெட் லாஞ்சர்களாம்.இது பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டதாம்.வாகனம் முழுவதும் ஆயுதங்கள் நிறம்பியிருந்ததாக பெதிக சொல்லுகிறார்கள்.அவர்கள் செய்தது அராஜகம் என்று சொல்லுகிறது தினமலர்.
தமிழ்மக்களை சொல்லி கொல்லுகிறான் சிங்களவன்.ஆனால் சொல்லாமல் கொல்லுகிறார்கள் காங்கிரசும் அதன் தோழமை கட்சிகளும்,தினமலர் போன்ற பத்திரிக்கைகளும்
இது கூட தினமலரின் சாதனை பட்டியலில் இடம் பெறலாம்
தினமலர் இணையதளம் இவ்வளவு பிரபலம் ஆனதற்கு என்ன காரணம்
Thursday, April 30, 2009
இலங்கையின் இனப்படுகொலை குறித்து கசிந்துள்ள இரகசிய தகவல்-அதிச்சி செய்தி
http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1241095140&archive=&start_from=&ucat=4&
முப்பரிமான தோற்றத்துடன் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கக் கூடிய ஜ.நா வின் செயற்கைக்கோளின் உதவியுடன், ஜ.நா மார்ச் 26 முதல் ஏப்பிரல் 26 வரை முல்லைத்தீவை இரகசியமாக படம் பிடித்து வந்துள்ள செய்தி தற்போது கசிந்துள்ளது.
Tuesday, April 28, 2009
உங்களுக்கு தெரிந்த நபர் ஆனால் உங்களுக்கு தெரியாத செய்தி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான கம்ரான் கான், தனது மாயாஜால பந்து வீச்சு மூலம் எதிரணிகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தானுக்கு வெற்றி தேடி தந்த இவருக்கு விரைவில் இந்திய அணியில் இடம்பெறும் தகுத வேகமாக கூடி வருகிரது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷான் வார்னிடம் ஒரு புதுமை உள்ளது. கடந்த ஆண்டு நடந்த முதல் தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கையே அற்றுப் போய் விட்ட பல வீரர்களுக்கு புது வாழ்வு கொடுத்தவர் வார்ன்.
கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த யூசுப் பதானுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. இப்படி இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.
அதே பாணியில் இந்த சீசனிலும் யாருமே அறிந்திதருந்த கம்ரான் கானை தூக்கி விட்டுள்ளார் வார்ன். இதில் விசேஷம் என்னவென்றால் கம்ரான் கான் இதுவரை முதல் தர போட்டி ஒன்றில் கூட விளையாடாதவர்.
கம்ரான் கானின் திறமையை கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்ந்து வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கம்ரான் பந்து வீசியபோது அதிலிருந்து ரன் ஏதும் வராதா என்று எதிர் அணியினர் டென்ஷன் ஆகும் அளவுக்கு கஞ்சத்தனமாக ரன்களை விட்டுக் கொடுத்து போட்டியை டை செய்தவர் கம்ரான்.
அதையடு்த்து 2 புள்ளிகள் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவரில், அதிரடி நட்சத்திர பேட்ஸ்மேன் கெய்லை அதிக ரன்கள் அடிக்க விடாமல் செய்து அசத்தினார்.
இதுவரை ஒரு முதல் தரப் போட்டிகளில் கூட விளையாடாத இவர் கங்குலி, மெக்கலம், கெய்ல் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு எதிராக பந்துவீசி தங்கள் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இதற்கு அவரது மனவலிமை தான் காரணம் என்பதை தவிர வேறு எந்த காரணமும் சொல்ல முடியாது.
விறகு வெட்டியின் மகன்...
தற்போது 18 வயதான இவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகத்துக்கு உரியது. எந்த உதவியும் இல்லாமல் கடின உழைப்பு ஒன்றை மட்டுமே நம்பி இருந்த அவருக்கு இன்று வெற்றி தேவதையி்ன் கருணை பார்வை கிடைத்துள்ளது.
கம்ரானின் தந்தை ஒரு விறகு வெட்டி. அவருடன் பிறந்தவர்கள் 6 சகோதரர்கள், 2 சகோதரிகள். அவர்களில் கம்ரான் தான் கடைசி. உத்தர பிரதேசத்தின் ஆலம்கார்க் பகுதியைச் சேர்ந்த இவர் கிரிக்கெட் வெறியில், 13 வயதில் மும்பை நோக்கி ஓடி வந்தார்.
மும்பையில் சாப்பிடவும், தூங்கவும் வழியில்லாமல் ரயில் நிலையத்தில் சுற்றியுள்ளார். ஆனால், தனது லட்சியத்தில் மட்டும் விடாப்பிடியாக உறுதியாக இருந்துள்ளார். அப்போது தான் ஒரு நாள் நவுசத் கான் என்ற கிரிக்கெட் பயிற்சியாளரின் கண்ணில் அவர் சிக்கியுள்ளார்.
கம்ரானின் வெறி மற்றும் அவரது நம்பி்க்கையைப் பார்த்த நவுசத் கான், பட்டை தீட்டப்பட வேண்டிய வைரம் கம்ரான் என்பதை உணர்ந்து அவருக்கு பயிற்சசியளித்தார்.
மும்பை உள்ளூர் போட்டி ஒன்றை காண வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் டேரன் பேரி இவரது பந்துவீச்சில் மயங்கி போய் அணியின் கேப்டன் வார்னிடம் பரிந்துரை செய்துள்ளார்.
கம்ரன் 140 கிமீ., வேகத்தில் பந்துவீச மிரண்டு போன வார்ன் திறமைக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த நம்பிக்கையில் தான் வார்ன் அவருக்கு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் மட்டும் சூப்பர் ஓவர் வீசும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அப்போது வார்ன், கம்ரனிடம் கூறுகையில், சூப்பர் ஓவரை பற்றி கவலைப்படாமல் பந்துவீசு. ஏனென்றால் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றி நீ தான் சூப்பர் ஓவருக்கு கொண்டு வந்துள்ளாய். கடைசி ஓவரை நீ சிறப்பாக பந்து வீசவில்லை என்றால் நாம் சூப்பர் ஓவருக்கே வந்திருக்க முடியாது என்றார்.
கைவிட மாட்டேன்...
இது குறித்து கம்ரன் கூறுகையில், வார்ன் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவர் ஒவ்வொரு முறையும் பந்தை என்னிடம் கொடுக்கும் போதும் அவரது தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் ஒரு போதும் அவரை கைவிட மாட்டேன் என்கிறார் கம்ரான்.
கம்ரானை இந்தியத் தேர்வாளர்களும் கைவிடாமல் தூக்கி விட்டால், இந்திய அணியையும் கம்ரான் கைவிடமாட்டார்.
உலக மக்களே உங்களுக்கு அதிர்ச்சி தகவல்:பிரித்தானியாவில் பரமேஸ்வரனின் இதய துடிப்பு குறைந்து வருகிறது
உலக மக்களே உங்களுக்கு அதிர்ச்சி தகவல்:பிரித்தானியாவில் பரமேஸ்வரனின் இதய துடிப்பு குறைந்து வருகிறது
ஈழத்தமிழருக்காய் 21 நாட்களாக உண்ணாநோன்பிருக்கும் பரமேஸ்வரனின் இதய துடிப்பு குறைந்து வருவதாக அவரை பரிசோதித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதயமுள்ள மனிதர்களே உங்கள் இதயத்தில் ஈழத்துக்கு ஒரு இடம் கொடுக்க கூடாதா???
நேற்று நடந்த சண்டையில் இலங்கை ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்
நேற்று நடந்த சண்டையில் இலங்கை ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.கொழும்பிலிருந்து இருபதற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்
வாகனங்கள் படையினருடன் மருத்துவமனையை அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறன.நேற்றி அதிகாலை இலங்கை விமானபடையின் குண்டு வீச்சில் 272 மக்கள் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் விமானத்தில் வீசப்பட்ட கொத்தணி குண்டுகள் பிரங்கி மூலம் வீசப்படுவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
என்னுடைய பதிவால் தமிழ்மணம் சரி செய்யப்பட்டதால் இத்துடன் முடித்துக்கொள்ளுகிறேன்.
என்று சொல்லி தமிழின தலைவரை போல அவமானப்பட நான் தயாராக இல்லை.நான் பதிவுப்பட்டை லிங்கை தட்டினபோது தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை இருந்துள்ளது.சிறிது நேரத்திலேயே சரியாகிவிட்டது.என் பதிவை பொருமையோடு படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
Monday, April 27, 2009
தமிழ்மணம் பதிவுப்பட்டை
அதில் கீழ்கண்ட செய்தி வெளியாகிறது.
Can't connect to local MySQL server through socket '/var/lib/mysql/mysql.sock' (2)
பதிவுப்பட்டை நிறுவ வேறு ஏதாவது வழியிருந்தால் சொல்லிதரும்படிக்க்கேட்டுக்கொள்ளுகிறேன்.
உண்ணாவிரதமும்,விருதும்
அடடா இதுவரை கலைஞர் அவரகளை வசனகர்த்த என்று மட்டும் எண்ணி வந்த அனைவருக்கும் ஒரு சின்ன அதிர்ச்சி அவர் நன்றாகவே நடிக்கவும் செய்கிறாரே.அவருக்கு நடிகர் திலகம்ன்னு விருது கொடுக்க முடியாது.ஏற்கனவே அந்த பெயரில் ஒருவர் உள்ளார்.ஆதனால் வேறு பெயரை யோசிப்போம்.
ஐயோ கொலை பண்றாங்கோ கொலை பண்றாங்கோ